Saturday, April 20, 2013

கண்ணகியைக் காட்டிலும் கற்பில் சிறந்தவள் மாதவி என்பது உங்களுக்குத் தெரியுமா??.



தமிழ் காவியங்களுள் தலைச் சிறந்த சிலப்பதிகாரத்தை அனைவரும் படித்திருப்போம்.ரசித்திருப்போம்.பலரின்  கண்ணோடத்தில்,கற்புக் கரசி எப்போதும் கண்ணகி தான்.எனது பார்வையில் எனக்கு எப்போதும் மாதவி தான் கற்பில் தலைச் சிறந்த காவியத் தலைவி.

இந்த இடுக்கையின் நோக்கம் கற்பில் சிறந்தவள் யார்? என்று இருவரையும் ஒப்பிடுவதல்ல.வரலாறு நமக்கு சொல்லவருவதை, நாம் சரியாக எடுத்துக் கொள்கிறோமா? என்பது தான்.நம்  வரலாற்று காப்பியங்களிலும், சரித்திரங்களிலும் மறைந்துவிட்ட  பாத்திரங்கள் நிறைய இருக்கின்றன. அப்படி மறைந்து, மறந்துக் கிடக்கும்  மாதவியின் புகழ் உரைப்பதே இந்த இடுக்கையின் நோக்கம்.

நான் சிலப்பதிகாரத்தை எனது 15 ஆம் வயதில் பத்தாம் வகுப்பில் படித்தேன்.என்னை கேள்விக் கேட்டு எழுப்பிவிடுவதையே வழக்கமாகக் கொண்ட என் தமிழ் ஆசிரியை அன்றும், சிலப்பதிகாரத்தை நடத்தி முடித்து விட்டு, "ஆதி பாடம் புரிந்ததா??இப்போது சொல் "கற்பில் சிறந்தவள் யார் என்றார்??"

தயக்கமே இல்லாமல் கண்ணகி என்று பதிலளித்தேன்.விளக்கும் கொடு என்றார்.

தவறான நீதி இழைத்தது அரசன் என்ற போதும், அவனை எதிர் கேள்வி கேட்டு தன் கணவன் குற்றமற்றவன் என நிருபித்தாள்.பத்தினி பெண்கள் கோபமாய் பார்த்தால் பச்சை மரங்களும் பற்றி எரியும் என்ற கூற்றின் படி கண்ணகியின் கோபத்தில் மதுரையே எரிந்தது.எனவே கண்ணகியே கற்புக் கரசி என்று பதிலளித்தான்.

இல்லை என மறுத்து எனக்கு மாதவியின் புகழை புரியவைத்த என் ஆசிரியரின் விளக்கம் பின்வருமாறு.

தான் தவறான நீதி தந்து ஒரு பெண்ணின் வாழ்வையே அழித்து விட்டோம் எனத் தெரிந்த அடுத்தகனமே பாண்டிய மன்னன் தன்  மனைவியுடன் உயிர் நீத்தான் என்பதை தான் வரலாறு சொல்கிறது.அவன் இறப்பின் பின்னும் சினம் அடங்காமல் தான் கண்ணகி மதுரையை எரித்தாள் .அவளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஒரு பெண்ணின் கோபம் அழிவில் முடியக் கூடாது என்பதைத்  தான்.

பிறப்பால் கண்ணகி உயர்ந்த குலத்தில் பிறந்தவள்.நல்ல சூழலில் நல்ல  பழக்க வழக்கங்களுடன் பாரம்பரியமான குடும்பத்தில் வளர்ந்தவள்.அவள் வழி மாறியிருந்தால் தான் ஆச்சரியமே தவிர,அவள் கற்பில் சிறந்து இருந்ததில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.


மாதவி பிறப்பால் தாசி குலத்தில் பிறந்து, தாசிகள் நிறைந்த இடத்திலேயே வளர்ந்தவள்."எந்த பிள்ளையும் நல்லப் பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே " என்ற கண்ணதாசனின் வரிகளைக்   கூட பொய்யாக்கி விட்டால் மாதவி.மாதவியின் அன்னை வஞ்சக எண்ணம் கொண்டு மாதவிக்கே தெரியாமல் கோவலனின் சொத்துக்களை கண்ணகியிடம்  இருந்து கொஞ்சம் கொஞ்சமாய்  பறித்தவள் என்று தான் சிலப்பதிகாரம் விவரிக்கிறது.அப்படி ஒரு அன்னையின் கைகளில் வளர்ந்த மாதவி உள்ளத்தாலும் உடலாலும்  தூய்மையாக இருந்தது தான் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.

மாதவியை எந்த ஒரு இடத்திலும் தவறு செய்தவளாக சிலப்பதிகாரம் வர்ணிக்கவில்லை.கோவலன் தன்னுடன் வாழ்ந்த போதும், அவனை கண்ணகியை சென்று பார்க்கும் படி வற்புருத்தியவள் மாதவி.கோவலன் அவளை நீங்கியதும் அவள் நினைத்திருந்தால் தாசியாக வாழ்ந்திருக்கலாம்.அவள்  அவ்வாறுச்  செய்யவில்லை. அவள் மனதாலும் உடலாலும்  வாழ்ந்தது கோவலன் ஒருவனுடன் மட்டுமே.கோவலன் அவளை நீங்கி கண்ணகியுடன் இணைந்ததும்,அவள்  அன்னை வஞ்சகமாய் பறித்த அனைத்துச்  சொத்துக்களையும் மீட்டுத் தந்துவிட்டு, பௌத்த மத துறவியானவள் மாதவி.தாசி குலத்தில் பிறந்த ஒருத்தி வேறு ஒருவனை ஏற்க மனமில்லாமல் துறவியானது உங்களை ஆச்சரியப் பட வைக்கவில்லையா?? இப்போதுச்  சொல்லுங்கள் பெண்மையில் சிறந்தவள் மாதவி அன்றோ?

ஆனால், இன்று வரை நம்மில் பலரும் கற்பின் வரலாற்று உதாரணாமாய் கண்ணகியைத் தான் சொல்கிறோமே தவிர, மாதவியை மறந்துவிட்டோம்.

இனிவரும் தலைமுறையினருக்குச்   சிலப்பதிகாரம் கற்பிக்கப்படுமா  என்றறியேன் நான்.ஒருவேளைக்  கற்பிக்கப் பட்டால், மறக்காமல் மாதவியின் புகழ் உரையுங்கள்.தவறானச்  சூழ்நிலையிலும், தவறு செய்ய  வாய்ப்பு கிடைத்தப் போதும் மாறாத மனங்களே மண்ணில் சிறந்தவை.


இந்தப் பதிவை மாதவியின் புகைப் படத்துடன் பதிவிடத்தான் ஆசைகொண்டேன் .அவளின் நல்லதொருப்  புகைப்படம் கூடக் கிடைக்கவில்லை இணையத்தில்.

அன்புடன்,

ஆதிரா.


9 comments:

  1. நீங்க சொன்னது சரிதான் மாதவியை போற்றுவோம்

    ReplyDelete
  2. ஆமாம், நான் கூட யோசித்ததுண்டு..சிறந்த பெண்ணான மாதவி பற்றியும் அவளுடைய மகள் மணிமேகலை பற்றியும் அவ்வளவாகப் பேசுவது இல்லை என்பது வருத்தமே..நல்ல பதிவிற்கு நன்றி ஆதிரா!

    ReplyDelete
  3. கோபம் அழிவில் முடியும் என்பதை இனி வரும் தலைமுறைக்கு உணர்த்தும் வரிகள் சிறப்புங்க.

    ReplyDelete
  4. மிகவும் அருமையான் விளக்கம் கற்பைப் பற்றி.
    unsung heroes என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்களே அது போல் காவியங்களில் நிறைய பேர் இருக்கிறார்கள்.
    ராமாயணத்தில் கூட சீதைப் புகழ் பாடுகிறோமே தவிர ஊர்மிளை அவ்வளவாகப் பேசப்படுவதில்லை.
    சிலப்பதிகாரம் பற்றி அழகாக விளக்கி இருக்கிறீர்கள். ஊர்மிளை போன்ற பலரைப் பற்றி எழுதினால் படிக்கக் காத்திருக்கிறேன் (அதிக உரிமை எடுத்துக் கொண்டேனோ? தவறாக இருந்தால் மன்னிக்கவும்)
    நன்றி ஒரு அருமையான விளக்கத்திற்கு.....

    ReplyDelete
  5. தோழி மாதவியின் புகழ் என்றும் எங்கேயும் எப்போதும் சிலப்பதிகாரத்தில் இழிவு படுத்தபடவே இல்லை என்றுதான் நான் நினைக்கிறன் கண்ணகியை விவாதத்திற்கு எடுத்து கொண்டால் குறைகள் பல சொல்லலாம் ஆனால் சாது மிரண்டால் என்பதை காட்டவே அந்த கடைசி பகுதி என்று நினைக்கிறேன் நல்ல பதிவு

    ReplyDelete
  6. தோழி....

    மாதவி, அடுத்தவளின் கணவனை அபகரித்தவள்!!!!

    ReplyDelete
  7. அருணா சொன்னது உண்மையாக இருக்கலாம்; அப்ப கோவலன் என்ன களிமண் மண்டையனா?
    அவன் கண்ணகியை திருமணம் செய்தவன் எனபதை மாதவியிடம் சொல்லிருப்பான் என்பதற்கு ஆதாரம் இருக்கா?

    கோவலன், ஒரு ஆனாதிக்க பொம்பளை பொறு....

    பாவம் மாதவி; கோவலன் எனற லுச்சாபயலிடம் ஏமாந்த அபலை!
    ஆம்! மாதவி...ஒரு அபலை...!
    ________________
    அருணா செல்வம்April 21, 2013 at 7:03 PM

    தோழி....

    மாதவி, அடுத்தவளின் கணவனை அபகரித்தவள்!!!!

    ReplyDelete
  8. தன்னை யார் போற்றி வைத்து கொள்கிறானோ அவனிடத்திலே இருப்பதே கற்பு என்று எங்கோ கேட்டேன்..அதன் படி இருவருமே சிறந்த நெறி உள்ளவர்கள். இதில் குறை காண தகுந்தவன் கோவலன் மட்டுமே.

    ReplyDelete
  9. உண்மையிலேயே உங்கள் பெயர் ஆதிரா தானா.. நல்ல பெயர்

    ReplyDelete