Saturday, February 2, 2013

மணமேடை

 
 
மனதால் மாலையிட்டுப் பின்
மணவறையில் அமருங்கள்
இல்லையெனில்
மணவறையில் அமர்ந்த பின்னாவது
மனதால் மாலையிட்டுக் கொள்ளுங்கள்
 
வெறுமனமாய் ஒரு திருமணம் செய்து பின்
வெறுப்பு வந்ததென்று விலகிச்செல்ல
நீங்கள் ஒன்றும்
 
கட்டி வைத்து கட்டவிழ்த்து ஓடும்
மாடுகள் அல்ல இது ஒன்றும்
மாட்டுத் தொழுவமும் அல்ல...
 
அணு அணுவாய் செத்து மடிவீரோ இல்லை
அனுதினமும் சிரித்து மகிழ்வீரோ இரண்டையும்
இன்பமாய் ஏற்று இணைந்தே இருங்கள்..
 
 
 
 - ஆதிரா

2 comments:

  1. கவிதை படிக்க நன்றாக இருக்கிறது.

    ReplyDelete